
குடிபோதையில் கலாட்டா : ‛ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுவிப்பு
விநாயகன் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார். குறிப்பாக அவர் மீது ஏகப்பட்ட அடிதடி வழக்குகள் இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது குடிபோதையில் போலீஸ் நிலையத்திலேயே கலாட்டா செய்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
எர்ணாகுளம் அருகே உள்ள கலூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த விநாயகன் குடியிருப்பு வாசிகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து எர்ணாகுளம் வடக்கு போலீசிற்கு குடியிருப்புவாசிகள் தகவல் கொடுத்தனர்.
போலீசார், விநாயகனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அங்கும் அவர் தகராறில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்து மருத்துவ பரிசோதனை செய்து, அவர் மது அருந்தியதை உறுதி செய்தனர். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!