
லியோ படத்திற்கு 4 மணி காட்சிக்கு அனுமதியில்லை: ஐகோர்ட் திட்டவட்டம்
அதன்படி, இன்று (அக்.,17) நடைபெற்ற விசாரணையின்போது, 5 காட்சிகளுக்கு அனுமதி அளிக்கிறீர்கள்; அதை செயல்படுத்த அனுமதிக்க வேண்டாமா என நீதிபதி அனிதா சுமந்த் கேள்வி எழுப்பினார். இதற்கு தமிழக அரசு தரப்பில், ""20 நிமிடங்களுக்கு இடைவெளி விட வேண்டுமென எந்த கட்டாயமும் இல்லை. 9 மணிக்கு காட்சிகளை துவங்க வேண்டும் என்பதுதான் அரசின் விதி; அதனை மீற முடியாது."" என வாதிடப்பட்டது.
பிறகு, "5 காட்சிகளுக்கு அனுமதி அளித்ததால் தானே அதிகாலை காட்சிக்கு அனுமதி கேட்கிறார்கள்" என நீதிபதி குறுக்கிட்டார். வாதத்தை தொடர்ந்த அரசு தரப்பு, ""விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு தினங்களில்தான் விலக்கு அளிக்கப்படுகிறது; சாதாரண நாட்களில் விலக்குதர முடியாது. லியோ படம் 2.45 மணிநேரம் என தெரிந்திருந்தால் 5 காட்சிகளுக்கு அனுமதி தந்திருக்க மாட்டோம். 4 மற்றும் 7 மணி காட்சிக்கு அனுமதி தருவதில் சிக்கல்கள் உள்ளன; எந்த படத்திற்கும் அனுமதியளிக்கவில்லை. கடந்தமுறை ஒரு படத்தின் 4 மணி காட்சிக்கு சென்ற ரசிகர் உயிரிழந்தார்; சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளது. லியோ படத்தின் டிரைலரை வெளியிட்டபோது தியேட்டர் சேதப்படுத்தப்பட்டது."" என வாதிடப்பட்டது.
இதனையடுத்து, "லியோ படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது. காலை 9 மணி காட்சிக்கு பதில் 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். காலை 9 மணிக்கு பதில் 7 மணிக்கு ரிலீஸ் செய்வது பற்றி அரசுதான் முடிவெடுக்க வேண்டும். தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையை பரிசீலித்து நாளை மதியத்திற்குள் உத்தரவு பிறக்க வேண்டும்" என தமிழக அரசுக்கு நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!