
லியோ படத்திற்கு சிறப்புக்காட்சி: அனுமதி அளித்தது தமிழக அரசு
இதனால் மாற்றுத்திட்டத்தை படக்குழு யோசித்தது. பட வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 18ம் தேதியன்றே பிரிமீயர் காட்சிகள் என்ற பெயரில் இரவு 7 மணி, 9 மணி, 11 மணி என சிறப்புக் காட்சிகளை நடத்தலாமா என பேசி வருவதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை நாள்தோறும் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் லியோ திரைப்படம் காலையிலேயே முதல் காட்சி திரையிடப்படும். இதனையடுத்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!