
விஜய் தேவரகொண்டா விஷயத்தில் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தும் ராஷ்மிகா
இன்னொரு பக்கம் இவர்கள் இருவருமே அடிக்கடி தனித்தனியாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்கின்றனர். அந்த சமயத்தில் இருவரும் ஒன்றாகத்தான் வெளிநாட்டு சுற்றுலாவில் பொழுதுபோக்குகிறார்களோ என்று யோசிக்க வைக்கும் விதமாக விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஆகியோர் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகின்றன.
ஏற்கனவே இரண்டு முறை இது போன்று புகைப்படங்கள் வெளியிட்டு யூகங்களை அதிகப்படுத்திய ராஷ்மிகா தற்போது லேட்டஸ்டாக துருக்கியில் ஒரு காபி ஷாப்பில் தான் அமர்ந்திருப்பது போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான் விஜய் தேவரகொண்டாவும் இதே காபி ஷாப்பில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இருவரும் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தான் ஒவ்வொருவரும் கொஞ்சம் இடைவெளி விட்டு வெளியிட்டு வருகிறார்களோ என்றே ரசிகர்கள் கூறுகின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!