
கணவர் மறைவுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்தார் மீனா
இந்த அதிர்ச்சியில் இருந்து மீனா மீளாமல் இருந்தார். பின்னர் படிப்படியாக அந்த சோகத்தில் இருந்து வெளியேறி தொலைக்காட்சி நிகழ்சிகளில் பங்கேற்றார். அவருக்கு பெரிய அளவில் பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக படங்களில் நடிக்காமல் இருந்த மீனா தற்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
மலையாள இயக்குனர் ஜெய ஜோஸ் ராஜ் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கிறார். அந்த படத்தின் கிளாப்போர்டை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, “மீண்டும் கேமரா முன்னால் நிற்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னொரு மறக்க முடியாத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்"" என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்.
மீனாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!