
ரீமேக் என்ற பெயரில் வேதாளம் படத்தைக் கெடுத்த போலா சங்கர் குழு
அந்தப் படத்தைத் தெலுங்கு ரசிகர்களும் ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரீமேக் செய்ய விரும்பி நடித்தார் சிரஞ்சீவி. மெஹர் ரமேஷ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த அந்தப் படம் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. தமிழில் இருந்த பல முக்கியமான விஷயங்களை தெலுங்கில் மாற்றியதுதான் படத்தின் தோல்விக்குக் காரணம் என தெலுங்கு விமர்சகர்களே குற்றம் சாட்டியுள்ளார்கள்.
சிரஞ்சீவியின் ஹீரோயிசம், தங்கை கதாபாத்திரத்தில் எடுபடாத கீர்த்தி சுரேஷ் என சில விஷயங்கள் படத்தின் வெற்றியைக் குலைத்திருக்கின்றன. தமிழில் ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்த "அண்ணாத்த" படம் தோல்வியடைந்தது. அது போல தெலுங்கில் சிரஞ்சீவியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்த "போலா சங்கர்" படமும் தோல்வியடைந்துள்ளது.
சிரஞ்சீவி மீண்டும் நடிக்க வந்த பிறகு அவர் நடித்த நேரடித் தெலுங்குப் படங்களுக்கு தெலுங்கு ரசிகர்கள் ஓரளவாவது வரவேற்பு தந்தார்கள். அதே சமயம் அவர் நடித்த ரீமேக் படங்களான "காட்பாதர், போலா சங்கர்" ஆகியவற்றிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை. ரீமேக் படங்களில் மீண்டும் நடிப்பதை சிரஞ்சீவி "ரீதிங்க்" செய்ய வேண்டும் என பெரும்பாலான விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!