
ரசிகர்களுக்கு அப்டேட் தந்த சூர்யா
இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்கள் சந்திப்பு விழாவில் ரசிகர்களை சந்தித்த சூர்யா, ‛‛ரசிகர்களிடம் தனது அடுத்த அடுத்த படங்களின் அப்டேட் குறித்து பகிர்ந்துள்ளார். அதன்படி, கங்குவா படம் நாம் நினைத்தது விட 100 மடங்கு நன்றாக வந்துள்ளது. சூர்யா 43வது படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதத்தில் துவங்குகிறது. மேலும், வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு விடுதலை இரண்டாம் பாகத்தின் வெளியீட்டிற்கு பிறகு துவங்கும் . இது அல்லாமல் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தை தனி படமாக உருவாக்க லோகேஷ் கதை ஒன்றை கூறியுள்ளார். விரைவில் அது படமாகும். இதற்கு பிறகுதான் இரும்பு கை மாயாவி லோகேஷ் இயக்கத்தில் உருவாகும்" என தனது அடுத்த பட அப்டேட்களை கூறி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார் சூர்யா .




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!