
லால் சலாம் : தொடங்கிய இடத்திலேயே முடிந்தது - ஐஸ்வர்யா நெகிழ்ச்சி
படப்பிடிப்பு நிறைவு நாளில் ரஜினி உள்ளிட்ட பட குழுவினர் அனைவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதோடு, திருவண்ணாமலையில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா ரஜினி, ஒரு பதிவும் போட்டுள்ளார். அதில், கடந்த நான்கு மாதங்களாக எங்கள் குழுவினர் கடுமையாக உழைத்து இந்த படப்பிடிப்பை முடித்துள்ளோம். கடைசி 22 மணி நேரம் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்தினோம். லால் சலாம் குடும்பத்திற்கு மிக்க நன்றி. திருவண்ணாமலையில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி அதே இடத்தில் முடித்துள்ளோம். இது தற்செயலாக நடந்த நிகழ்வாக இருக்க முடியாது. உங்கள் அனைவரது ஆசியால்தான். அடுத்து லால் சலாம் படத்தின் இறுதி கட்டப் பணிக்கு செல்ல போகிறோம் என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!