
முடிந்ததாக சொல்லப்பட்ட லியோ படப்பிடிப்பு மீண்டும்…
இந்நிலையில் விடுபட்ட சில காட்சிகளை எடுப்பதற்காக மீண்டும் காஷ்மீர் சென்றுள்ளார்களாம். படத்திற்கான எடிட்டிங் நடக்கும் போதுதான் முதல் கட்டப் படப்பிடிப்பில் சில காட்சிகளை எடுக்காமல் விட்டதைக் கண்டுபிடித்தார்களாம். அதில் விஜய் நடிக்கும் சில காட்சிகளும் இருக்கிறதாம். ஆனால், விஜய் தற்போது வெளிநாட்டிற்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார். அவர் இல்லாமலேயே டூப் போட்டு காட்சிகளைப் படமாக்கிக் கொள்ளலாம் என லோகேஷ் சொல்லிவிட்டாராம். இன்னும் இரண்டு வாரங்கள் வரை படப்பிடிப்பு நடக்கலாம் எனத் தெரிகிறது.
அதற்கான செலவு சில பல கோடிகள் வரை கூடுதலாக ஆகும் என்றாலும் படத்திற்கான வியாபாரம் சிறப்பாக நடந்து வருவதால் தயாரிப்பாளரும் போய் வாருங்கள் என சம்மதம் சொன்னதாகத் தகவல்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!