
நித்யா மேனனா ? மிருணாள் தாக்கூரா ? : சாய்ஸில் ட்விஸ்ட் தந்த துல்கர் சல்மான்
அப்படி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் இந்த ஆல்பத்தை உங்களுக்கு உதவியாக புரமோஷன் செய்ய வேண்டும் என்றால் யாரை அழைப்பீர்கள்..? நித்யா மேனனையா அல்லது மிருணாள் தாக்கூரையா என்கிற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் மிருணாள் தாக்கூர் என்று பதில் அளித்தார் துல்கர் சல்மான். இது பலருக்கும் ஆச்சரியமாக இருந்திருக்கும்.
காரணம் கடந்த பத்து வருடங்களாக துல்கர் சல்மானுடன் இணைந்து மூன்று படங்களில் கதாநாயகி நடித்துள்ளார் நித்யா மேனன். ஆனால் மிருணாள் தாக்கூர் கடந்த வருடம் வெளியாக சீதாராமம் என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டும்தான் துல்கருடன் இணைந்து நடித்துள்ளார். அதனால் நித்யா மேனன் பெயரைத்தான் அவர் சொல்வார் என பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் இதற்கு விளக்கம் அளித்த துல்கர் சல்மான், “சீதாராமம் திரைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். அந்த படம் நான் கனவு கண்டதை விட மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. அது ஒரு ஐகானிக் படம்” என்று கூறி சென்டிமென்ட் ஆக மிருணாள் தாக்கூர் பெயரை தான் கூறியதற்கான காரணத்தை வெளிப்படுத்தினார் துல்கர் சல்மான்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!