
ஜெயிலர் படம் ரிலீஸ் : இன்ப அதிர்ச்சி கொடுத்த தனியார் நிறுவனம்
இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று ஜெயிலர் திரைப்படத்தை ப்ரோமோஷன் செய்யும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 8 கிளைகளுடன் சென்னை மற்றும் பெங்களூருவில் இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்று ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாவதைத் தொடர்ந்து அவர்களது நிறுவன ஊழியர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாக உள்ள நிலையில், எங்களது HR டிபார்ட்மென்டுக்கு விடுப்பு விண்ணப்பங்கள் குவிவதைத் தடுக்க, ஆகஸ்ட் 10ம் தேதி எங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளது.
மேலும், எங்கள் பணியாளர்களின் சிரமத்தைக் குறைக்க, அவர்கள் அனைவருக்கும் ஜெயிலர் படத்திற்கான இலவச டிக்கெட்களையும் நாங்கள் வழங்குகின்றோம் என்றும் அறிவித்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் சென்னை, பெங்களூர், திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் மற்றும் அழகப்பன் நகரில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் எங்கள் தாத்தாவுக்கும், எங்கள் அப்பாவிற்கும், எங்களுக்கும், எங்கள் பிள்ளைகள் மற்றும் பேரன்களுக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்" என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. அந்த அறிவிப்பின் இறுதியில் "ரஜினிகாந்த் வாழ்க்" என்ற பதிவுடன் அந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!