
ரொமான்ஸ் செய்யும் மகளுக்கும் அம்மாவுக்கும் இடையே தவிக்கும் ஹீரோவின் கதை ‛எல்.ஜி.எம்
கோவையில் நேற்று நடந்த, எல்.ஜி.எம்., படக்குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பில், நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசினார். அவர் பேசியதாவது: ""தோனி என்டர்டெயின்மென்ட்" தயாரிப்பில், முதன் முறையாக தமிழில் படம் இயக்கப்பட்டுள்ளது சந்தோஷம். காதல் செய்யும் மகளுக்கும், அம்மாவுக்கும் இடையே தவிக்கும், ஹீரோவை பற்றிய கதை இது. படத்தில் புகைப்பிடிக்கும், மது அருந்தும் காட்சிகள் இல்லை. ஏற்கனவே நடித்த படங்களில் கதைகளுக்கு ஏற்ப காட்சிகள் இருந்ததால், புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்திருப்பேன். வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமைந்தால், நடிக்க தயாராக உள்ளேன். பார்க்கிங், டீசல் உள்ளிட்ட படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன,"" என்றார்.
ஹீரோயின் இவானா, ""லவ் டுடேவுக்கு பிறகு, தோனி தயாரிப்பில் நடிக்கும் போது சந்தோஷமாக இருந்தது. நதியா, ஹரிஷ் போன்ற மூத்த நடிகர்களுடன் நடிக்கும் போது நல்ல அனுபவம் கிடைத்தது,"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!