
அயலான் படத்திற்காக நடந்த திடீர் படப்பிடிப்பு
ஜூலை 17, 2023
Advertisement
"இன்று நேற்று நாளை" படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகாத்திகேயன் நடித்து வரும் படம் "அயலான்". ஏஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. வேற்று கிரக வாசி கதை என்பதால் இப்படத்தில் நிறைய விஎப்எக்ஸ் காட்சிகள் இடம் பெறுகின்றன. அதற்கான வேலைகள் கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது.
படத்தில் சில முக்கிய காட்சிகளின் விஎப்எக்ஸ் வேலைகளுக்காக சென்னையில் மீண்டும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். அதில் நடிகர்கள் யாரும் பங்கு பெறவில்லையாம். சென்னையில் சில பிரபலமான இடங்களைத் தனியாகப் படமாக்கியுள்ளார்கள். அவற்றை வைத்து விஎப்எக்ஸ் காட்சிகள் சிலவற்றை உருவாக்க வேண்டியுள்ளதாம். "அயலான்" படத்திற்காக உருவாகி வரும் விஎப்எக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த "மாவீரன்" கடந்த வாரம் வெளியானது. அவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத தமிழ்ப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். காஷ்மீரில் அதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. "மாவீரன்" பட வெளியீட்டிற்காகக் கடந்த வாரம் படப்பிடிப்பிலிருந்து வந்த சிவகார்த்திகேயன் மீண்டும் அப்படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.
படத்தில் சில முக்கிய காட்சிகளின் விஎப்எக்ஸ் வேலைகளுக்காக சென்னையில் மீண்டும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். அதில் நடிகர்கள் யாரும் பங்கு பெறவில்லையாம். சென்னையில் சில பிரபலமான இடங்களைத் தனியாகப் படமாக்கியுள்ளார்கள். அவற்றை வைத்து விஎப்எக்ஸ் காட்சிகள் சிலவற்றை உருவாக்க வேண்டியுள்ளதாம். "அயலான்" படத்திற்காக உருவாகி வரும் விஎப்எக்ஸ் காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடித்த "மாவீரன்" கடந்த வாரம் வெளியானது. அவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத தமிழ்ப் படம் ஒன்றில் நடித்து வருகிறார். காஷ்மீரில் அதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. "மாவீரன்" பட வெளியீட்டிற்காகக் கடந்த வாரம் படப்பிடிப்பிலிருந்து வந்த சிவகார்த்திகேயன் மீண்டும் அப்படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!