
குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் : புதியவர்கள் உருவாக்கும் படம்
ஏ.சோணை இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது : நாகரீக உலகில் நகரங்கள் பரபரப்பாக இயங்கினாலும் பல கிராமங்களின் நிலை அப்படியேதான் இருக்கிறது. அதிலும் மலை கிராமத்து மக்களின் நிலைமை மிகவும் பின்தங்கியேதான் உள்ளது. அப்படிபட்ட மலைகிராமத்து இளைஞர்கள் நால்வர் வேலை தேடி அருகில் உள்ள மதுரை மாநகருக்கு வருகின்றனர்.
ஒரு இடத்தில் தங்கி வேலை செய்துவரும் இவர்களிடம் சிலர் வம்பு இழுத்து தொல்லை கொடுக்கின்றனர். இந்த சூழ்நிலையில் அந்த நால்வரிடமும் ஒரு கைத்துப்பாக்கி கிடைக்கிறது. அதனால் ஒரு விபரீதம் ஆகி நால்வரும் போலீசில் மாட்டுகின்றனர். அதிலிருந்து இவர்கள் எப்படி மீண்டு வருகின்றனர் என்பதை திரில்லுடன் நகைச்சுவையையும் கலந்து இயக்கி இருக்கிறேன் என்கிறார் இயக்குனர் ஏ.சோனை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!