
போலா சங்கர் படத்தின் டப்பிங்கை முடித்த சிரஞ்சீவி
சாஹர் மகதி இசையமைக்கும் இந்த படத்தை ஏ.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். வருகின்ற ஆகஸ்ட் 11ம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் அந்த டீசரை பார்த்த தமிழ் ரசிகர்கள் இது வேதாளம் ரீமேக்கா என்று கேள்வி எழுப்பினர்.
ஏற்கனவே இந்த படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் சிரஞ்சீவி தனது சம்மந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் பணிகளை முடித்ததாக நேற்று போட்டோ உடன் பகிர்ந்துள்ளார். மேலும், முழுமையான படமாக பார்க்கும் போது திருப்தியாக உள்ளது. மாஸ் எண்டர்டெயினர் படமாக வந்துள்ளது. ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.
டப்பிங் முடித்த கையோடு சிரஞ்சீவி அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். திரும்பி வந்ததும் தனது அடுத்த பட படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!