
பம்பரில் கேரள லாட்டரி சீட்டு கதை
தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகி உள்ள இந்த படத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த குடும்பத்திற்கு 10 கோடி பரிசு விழுகிறது. அது யார் என்பதை தேடி ஒரு கூட்டம் அலைகிறது. விஷயம் கசிந்து உறவுக்கூட்டம் முற்றுகிறது. கேரள அரசு பணம் தமிழனுக்கு செல்வதா என்ற பிரச்சினை உருவாகிறது. இறுதியில் நடப்பது என்ன, என்பதுதான் பம்பர் படத்தின் கதை. இதனை காமெடி கலந்து இரு மாநில உணர்வுகளின் பிரச்சினையாக உருவாக்கி உள்ளார் அறிமுக இயக்குனர் செல்வகுமார்.
இப்படத்தை வேதா பிக்சர்ஸ் பேனரில் சு.தியாகராஜா தயாரித்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, ஒளிப்பதிவை வினோத் ரத்தினசாமி கையாண்டுள்ளார். வெற்றி, ஷிவானி ஆகியோர் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். ஹரிஷ் பெரடி முக்கியமான கேரக்டரில் அதாவது லாட்டரி வியாபாரியாக நடித்துள்ளார். வருகிற 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!