
அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணாததால் முன்னணி நடிகை பறிபோனது: நடிகை பாலாம்பிகா வேதனை
பின்னர் சின்னத்திரை பக்கம் திரும்பிய பாலாம்பிகா, பல சீரியல்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் அதிர்ச்சி தரக்கூடிய தகவலை அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், ‛‛அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் விஜய்க்கு ஜோடியாக நடிக்கலாம் என்று சொன்னார்கள். அதில் உடன்பாடு இல்லை. அதுவும் இல்லாமல் என் அப்பாவுக்கும் இதில் உடன்பாடில்லை. இப்படி சென்றால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பு நமக்கு தேவையில்லை என அப்பா சொல்லிவிட்டார். விஜய் உடன் நான் நடித்திருந்தால் தற்போது என் வாழ்க்கை மாறியிருக்கும்.
எனது திருமண வாழ்க்கையும் ஒழுங்காக அமையவில்லை. கணவர் சரியில்லை. அதனால் திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டேன். நான் பல நாடுகளுக்கு சுற்றியிருக்கிறேன். நன்றாக சம்பாதித்தபோது கொஞ்சம் அதிகமாகவே ஆடிவிட்டேன். அதனால் அனைத்தையும் இழந்துவிட்டேன். கொரோனா சமயத்தில் கஷ்டப்பட்டபோது நடிகர் சத்யராஜை தொடர்புகொண்டு உதவி கேட்டேன். அவர் என்னை வீட்டுக்கு அழைத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினார். விஜயகாந்தை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. இவ்வாறு கூறினார்.
பாலாம்பிகாவின் இந்த பேட்டி, தமிழ் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!