
ஆதிபுருஷ் படத்தில் சர்ச்சை வசனத்தை நீக்க முடிவு: மத்திய அமைச்சர் தகவல்
இது குறித்து படத்தின் வசனகர்த்தா மனோஜ் முன்டாஷிர் சுக்லா நேற்று கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை ரசிகர்களின் உணர்வுகளை விட பெரியது எதுவுமில்லை. நான் எழுதிய வசனங்களை நியாயப்படுத்த முடியும், ஆனால் அது, உங்கள் வலியைக் குறைக்காது. உங்கள் உணர்வுகளை புண்படுத்தும் வசனங்களை திருத்துவது என, நானும், படத் தயாரிப்பாளரும், இயக்குனரும் முடிவு செய்துள்ளோம். திருத்தப்பட்ட வசனங்கள், இந்த வாரம் படத்தில் சேர்க்கப்படும்" என்றார்.
இந்த நிலையில் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், ""சிபிஎப்சி (சென்சார் வாரியம்) இது குறித்து முக்கிய முடிவெடுத்துள்ளது. யாருடைய மனதையும் புண்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. கண்டனத்தை எழுப்பி உள்ள வசனங்களை நீக்குவது குறித்து, இயக்குனருடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது"" எனக் கூறினார்.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!