
நாம் நினைத்தது போல் எதுவும் நடக்காது ; உண்மையாக இருக்க வேண்டும் : சமந்தா உருக்கம்
அந்த பதிவில், மயோசிடிஸ் நோயினால் அவதிப்பட்டு வருவதால் கடந்த ஓராண்டில் எனது வாழ்க்கை பெரிய போராட்டக் களமாக மாறிவிட்டது. எனது உடம்புக்குள் பல போராட்டங்கள் நடந்தது. அதுமட்டுமின்றி சர்க்கரை, உப்பு, பருப்பு வகைகள் கூட உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு மாத்திரைகள் மட்டுமே பல நேரங்களில் உணவாக்கப்பட்டது. அதே நேரத்தில் தொழில் முறையில் சில தோல்விகள் என்னை மேலும் பாதித்தது.
கடந்த ஓராண்டு கால பிரார்த்தனை பூஜைகள் எந்த ஒரு பரிசையும் எதிர்பார்த்து நான் கடவுளை பிரார்த்தனை செய்ததில்லை. மனவலிமைக்காகவும் அமைதிக்காகவும் தான் பிரார்த்தனை செய்தேன். சில சமயம் பெரிய வெற்றி என்பது அவசியம் இல்லை. முன்னோக்கி நகர்வதையே எனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கிறேன். எல்லா நேரத்திலும் நாம் நினைப்பது எல்லாம் நடக்காது என்பதை கடந்த ஆண்டில் நான் கற்றுக் கொண்டேன். ஒரு சிலவற்றை கட்டுப்படுத்த வேண்டும், மீதி உள்ளவற்றை விட்டுவிட வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டேன்.
கடந்த காலங்களில் நடந்த சோகங்கள், தோல்வியை நினைத்து அதில் மூழ்கி விடக்கூடாது. நாம் நேசிப்பவர்களிடமும் நம்மை நேசிப்பவர்களிடமும் எப்போதும் உண்மையாக இருக்க வேண்டும். உங்களில் பலர் கடினமான சூழ்நிலையை சந்தித்திருப்பீர்கள், உங்களுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். கடவுள் சில விஷயங்களை தாமதம் செய்யலாம். ஆனால் கைவிட மாட்டார்.
இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!