
சின்னது என்றாலும் ஒர்த் ஆனது ; பீரியட் படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ்
ஜித்தின்லால் என்பவர் இயக்கிவரும் இந்தப்படம் மூன்று வித காலகட்டங்களில் நிகழும் பீரியட் படமாக இது உருவாகியுள்ளது. சமீபத்தில் ரசிகர்களுடன் சாட்டிங்கில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படம் குறித்து கூறும்போது, “இந்த படத்தில் எனது கதாபாத்திரம் சிறிது தான். என்றாலும் கதைக்கு ரொம்பவே முக்கியமானது. இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்த அனுபவம் வித்தியாசமாக இருந்தது. விரைவில் இந்த படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக மலையாளத்தில் துல்கரின் ஜோமோண்டே சுவிசேஷங்கள், நிவின்பாலியின் சகாவு ஆகிய படங்களில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!