
16வது படத்தில் விளையாட்டு வீரராக நடிக்கிறார் ராம்சரண் : செப்டம்பரில் படப்பிடிப்பு
ஏப் 28, 2023
Advertisement
ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார் ராம்சரண். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கும் நிலையில் அஞ்சலி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. தற்போது 1000 ஸ்டன்ட் நடிகர்கள் நடிக்கும் ஒரு பிரமாண்ட ஆக்சன் காட்சியை படமாக்கப்பட்டு வருகிறது. அன்பறிவ் மாஸ்டர்கள் இந்த சண்டை காட்சியை படமாக்குகிறார்கள்.
இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தை அடுத்து புச்சி பாபு சனா இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் ராம்சரண். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் ஒரு பிரபல விளையாட்டு கலைஞரின் பயோபிக் கதையில் உருவாக இருப்பதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியான நிலையில் படக்குழு அதை மறுத்துள்ளது.
இது குறித்து இயக்குனர் புச்சி பாபு சனா வெளியிட்டுள்ள செய்தியில், இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ஆர்.சி 16 என்று தற்போது அழைக்கப்படுகிறது. இப்படம் ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட ஒரு கதையில் தயாராகிறது. ஆனால் எந்த பிரபலமான விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்ட கதையில் உருவாகவில்லை. நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதையில் இப்படம் உருவாகிறது. அந்த வகையில் முழுக்க முழுக்க இப்படம் ஒரு கற்பனையான விளையாட்டு கதையில் உருவாகிறது என்று அவர் தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில் அடுத்த படத்தில் ராம்சரண் ஒரு விளையாட்டு வீரராக நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தை அடுத்து புச்சி பாபு சனா இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார் ராம்சரண். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் ஒரு பிரபல விளையாட்டு கலைஞரின் பயோபிக் கதையில் உருவாக இருப்பதாக டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியான நிலையில் படக்குழு அதை மறுத்துள்ளது.
இது குறித்து இயக்குனர் புச்சி பாபு சனா வெளியிட்டுள்ள செய்தியில், இந்த படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. ஆர்.சி 16 என்று தற்போது அழைக்கப்படுகிறது. இப்படம் ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட ஒரு கதையில் தயாராகிறது. ஆனால் எந்த பிரபலமான விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்ட கதையில் உருவாகவில்லை. நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதையில் இப்படம் உருவாகிறது. அந்த வகையில் முழுக்க முழுக்க இப்படம் ஒரு கற்பனையான விளையாட்டு கதையில் உருவாகிறது என்று அவர் தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில் அடுத்த படத்தில் ராம்சரண் ஒரு விளையாட்டு வீரராக நடிக்க இருப்பது தெரியவந்துள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!