
ஆஸ்கர் விருது பெறுவது முக்கியமல்ல - வெற்றிமாறன் பேச்சு
கேஜிஎப், ஆர்ஆர்ஆர் , காந்தாரா போன்ற படங்கள் பெரிய வெற்றி பெறுவதற்கு காரணம் அவை அனைத்துமே அந்த மக்களுக்காக எடுக்கப்பட்ட படங்கள். அவர்களுடைய கலாச்சாரம், நடிகர்கள் ஸ்டைலில் எடுக்கப்பட்ட படம், அதனால்தான் அந்த படங்கள் உலக அளவில் பிரபலமாகின . நம்முடைய கதைகளை நாம் சொல்லுகிறோம். ஆனால் அதற்கான உணர்வு எல்லை கடந்து ரீச் ஆகிறது. ஆஸ்கர் விருது வாங்குவது முக்கியமில்லை. நம் மக்களுக்கான படம் நாம் கொண்டாடுகிற படத்தை ஆஸ்கர் வரை கொண்டு சென்று அவர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்றால் அதனைதான் நான் ஒரு புரட்சியாக பார்க்கிறேன்.
தி எலிபெண்ட் விஸ்பர்ரஸ் குறும் படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் காட்டப்பட்டுள்ள எமோஷன் அருமையாக உள்ளது. தென்னிந்திய படங்கள் இந்திய சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் அதற்கு காரணம் நம்முடைய கதைகள், நமது மக்களுக்கான கதைகளை சொல்வதால் தான் அந்த தாக்கம் இருக்கிறது. நம்முடைய அடையாளங்களோடு தனித்துவங்களோடு பெருமைகளோடு படங்கள் எடுப்பதுதான் நம்முடைய வளர்ச்சிக்கு காரணம். மற்ற திரை உலகம் இதை பின்பற்றாததால்தான் பின்னடைவை சந்திக்கின்றன.
இவ்வாறு வெற்றிமாறன் பேசினார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!