
ஏழு மொழிகளில் வெளியாகும் மலையாள படத்தில் கதாநாயகியாக அனுஷ்கா
இந்த நிலையில் மலையாளத்தில் ஒன்பதாம் நூற்றாண்டு பின்னணியில் தயாராக உள்ள கத்தனார் என்கிற கதாநாயகியாக நடிக்க அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக ஜெயசூர்யா நடிக்கிறார். ஏற்கனவே ஜெயசூர்யா நடித்த மங்கி பென் மற்றும் கடந்த வருடம் மலையாளத்தில் குடும்பப்பாங்கான படமாக வெளியாகி வெற்றி பெற்ற ஹோம் ஆகிய படங்களை இயக்கிய ரோஜின் தாமஸ் தான் இந்த படத்தை இயக்குகிறார். மலையாள திரையுலகில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான கோகுலம் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது.
அனுஷ்காவை இந்த படத்தின் மூலமாக மலையாள திரையுலகிற்கு அழைத்து வருவதன் பின்னணியில் ஆச்சரியமான காரணம் ஒன்றும் உள்ளது. இந்த படம் கிட்டத்தட்ட 90 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் கிட்டத்தட்ட ஏழு மொழிகளில் இந்த படம் வெளியிடப்படும் என்றும் அதற்காகவே நடிகை அனுஷ்காவை இந்த படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் ஏப்.,10ம் தேதி துவங்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 200 நாட்கள் நடைபெற இருக்கிறதாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!