
மேடை நாடகத்தில் நடிக்க விரும்பும் ரஜினிகாந்த்
இந்த நிலையில் மேடை நாடகம் ஒன்றில் நடிக்க விரும்புவதாக தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார் ரஜினிகாந்த். சமீபத்தில் மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா முகேஷ் அம்பானி கட்டியுள்ள கலாச்சார மையம் திறப்பு விழாவில் தனது இளைய மகள் சவுந்தர்யாவுடன் கலந்து கொண்டார் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 2000 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்கும் விதமாக அந்த அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.
அந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிறகு முற்றிலும் நவீனமயமாக வடிவமைக்கப்பட்டிருந்த இந்த அரங்கையும், அதில் நிகழ்த்தப்பட்ட கலை நிகழ்ச்சிகளையும், அதற்காக மெனக்கெட்டிருந்த நீட்டா முகேஷ் அம்பானிக்கு தனது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். அதுமட்டுமல்ல இந்த அரங்கில் மேடை நாடகம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்பது தனது ஆசை என்றும் விரைவில் அது நிகழும் என்றும் குறிப்பிட்டுள்ளார் ரஜினிகாந்த்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!