
மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி
மார் 30, 2023
Advertisement
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி நடித்து கடந்து ஆண்டு வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் 1. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 அன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் வெளியான பொழுது சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் வரலாற்றை திரித்து பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கியுள்ளதாக மணிரத்னம் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் மணிரத்னம் மீது அவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் பொன்னியின் செல்வன் நாவலை படித்திருக்கிறீர்களா என்று மனுதாரருக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!