
ஹீரோவுக்கு சமமான சம்பளம் கேட்டு கெஞ்ச மாட்டேன் : சமந்தா நெத்தியடி பதில்
சமந்தாவும் பல்வேறு ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். அப்படி அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் ஹீரோ, ஹீரோயின் இருவருக்கும் சமமான ஊதியம் கொடுக்க வேண்டும் என்கிற விவாதம் எழுந்துள்ளது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சமந்தா, “நிச்சயமாக நானும் அதற்காக போராடத்தான் போகிறேன். ஆனால் என்னுடைய கடுமையான உழைப்பு மற்றும் வெற்றிகளால், உங்களுக்கு நாங்களே இந்த அளவு ஊதியம் கொடுக்கிறோம் என அவர்களாகவே முன்வந்து கொடுக்கும்படி செய்வேனே தவிர, யாரிடமும் சென்று எனக்கு சரிசமமாக சம்பளம் கொடுங்கள் என்று கெஞ்ச மாட்டேன்” என்று நெத்தியடியாக பதில் அளித்துள்ளார்

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!