
ரிலீஸுக்கு தயாராகும் வணங்காமுடி ; டப்பிங் பணிகள் தீவிரம்
இதில் நரகாசுரன் படம் ரிலீஸ் ஆவதற்கு வாய்ப்பில்லை என்றே சொல்லப்பட்டு வருகிறது. இதேபோன்று சதுரங்க வேட்டை 2, கள்ளபார்ட் மற்றும் வணங்காமுடி ஆகிய படங்களும் ரிலீஸாக முடியாத வகையில் வெவ்வேறு விதமான சிக்கல்களில் சிக்கி இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் செல்வா டைரக்சனில் புதையல் என்கிற படத்தில் நடித்திருந்தார் அரவிந்த்சாமி. இந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது டைரக்சனில் ஆரம்பித்த வணங்காமுடி என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார் அரவிந்த்சாமி.
இந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக ரித்திகா சிங், அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடிக்க, முக்கிய இடத்தில் நடிகைகள் சிம்ரன், சாந்தினி தமிழரசன், நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து நீண்ட நாட்கள் ஆன நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. அனேகமாக ரிலீசுக்கு காத்திருக்கும் அரவிந்த்சாமியின் படங்களில் இந்த வணங்காமுடி படம் இந்த வருடத்தில் எப்படியும் வெளியாகும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!