
டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கு சீல் : ராதாரவி விளக்கம்
இதுகுறித்து ராதாரவி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டிட விதிமீறல் புகார் எழுந்தபோது நான் பொறுப்பில் இல்லை. அப்போது பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் இப்போது இல்லை. கட்டிடத்துக்கு எனது பெயரை வைக்க முடிவு செய்தபோது வேண்டாம் என்று மறுத்தேன். டப்பிங் கலைஞர்கள் சங்க கட்டிடம் கட்டியதை எதிர்த்து வழக்கு போட்டதும், வக்கீல் மூலம் கோர்ட்டில் முறையான விளக்கம் அளித்தோம்.
மாநகராட்சி சார்பில் ஒரு மாதத்துக்கு முன்பே நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நோட்டீஸ் வந்து இருக்கலாம். வராமலும் இருக்கலாம். படப்பிடிப்பு உள்ளிட்ட வேறு பணிகளில் நான் தீவிரமாக இருந்ததால் நோட்டீஸ் என் கவனத்துக்கு வரவில்லை. டப்பிங் அலுவலகம் வேறு இடத்தில் தொடர்ந்து செயல்படும். சீல் வைக்கப்பட்ட கட்டடத்தை திறக்க கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய இருக்கிறோம். டப்பிங் சங்கத்துக்கு என்னை தொடர்ந்து தலைவராக தேர்வு செய்து வருவதால் சிலருக்கு பொறாமையும், காழ்ப்புணர்ச்சியும் இருக்கிறது. அதன் விளைவாகவே இப்படி நடக்கின்றன.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!