
கிரிக்கெட் உடையுடன் யுவா பட போட்டோஷூட்டில் கலந்து கொண்டு தேர்வான காந்தாரா நாயகி
சமீபத்தில் இந்த படத்திற்காக இவர்கள் இருவரையும் வைத்து போட்டோஷூட் நடத்தப்பட்டது. அந்தசமயம் கிரிக்கெட் கிரவுண்டில் விளையாடிக் கொண்டிருந்த சப்தமி கவுடா அங்கிருந்தபடியே நேராக தயாரிப்பு அலுவலகத்தில் சென்று போட்டோஷூட்டில் அதே உடையுடன் கலந்து கொண்டாராம். அதன் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாட மைதானத்திற்கு திரும்பிய சப்தமி கவுடாவுக்கு சில மணி நேரங்களிலேயே அவர் தேர்வாகி விட்டார் என சந்தோஷ செய்தியும் தேடி வந்ததாம்.
“நீண்ட நாளைக்கு என்னை காந்தாரா படத்தின் லீலா கதாபாத்திரமாகவே இருக்க முடியாது, எனக்குள் இன்னும் பல கதாபாத்திரங்கள் ஒளிந்துள்ளன அவற்றை ஒவ்வொன்றாக வெளிப்படுத்த போகிறேன்” என்று கூறியுள்ளார் சப்தமி கவுடா.
காந்தாரா படத்தை தயாரித்த ஹோம்பலே பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!