
சந்தீப் கிஷன் படத்திற்கு சிக்கல்
இந்த படம் வெளியான 20 நாளிலேயே ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கத்தின் விதிமுறைகளின்படி ஒரு மாதத்திற்கு பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும். இந்த விதிமுறையை மீறிவிட்டதாக தியேட்டர் அதிபர்கள் சங்கம் குற்றம் சாட்டி உள்ளனர்.
தற்போது இரண்டாவது ரவுண்டாக தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ள இந்த படத்தை தொடர்ந்து திரையிட வேண்டாம் என்று தியேட்டர் அதிபர்கள் சங்கம் வாய்மொழி உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதோடு விரைவில் நடக்க உள்ள சங்கத்தின் செயற்குழுவில் இதுபற்றி பேசி மைக்கேல் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நாயகன் ஆகியோரின் படங்களுக்கு வருங்காலங்களில் ஒத்துழைப்பு தரலாமா வேண்டாம் என்பதை பற்றியும் பேச உள்ளனராம்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!