
ரோபோ சங்கர் வீட்டில் கிளிகள் பறிமுதல்
சென்னை வளசரவாக்கம், லட்சுமி நகர் 11வது தெருவில் காமெடி நடிகர் ரோபோ சங்கரின் வீடு உள்ளது. இவர், அஜித்குமார், தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் திரைப்படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன், தன் வீட்டில் இரண்டு கிளிகள் வளர்ப்பது குறித்து, சமூக வலைதளத்தில், "வீடியோ" பதிவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த வனத்துறை அதிகாரிகள், வளசரவாக்கத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டிற்கு நேற்று சென்றனர்.
விசாரணையில், அவர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வீட்டில் அவர் சட்ட விரோதமாக வளர்த்து வந்த இரண்டு கிளிகளை, வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த கிளிகள், கிண்டி சிறுவர் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டன. இது குறித்து விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!