
ஜல்லிக்கட்டு இயக்குனரின் கதையை ஓகே செய்த சூர்யா
ஜன 16, 2023
Advertisement
மலையாள திரையுலகில் ‛அங்கமாலி டைரிஸ்" என்கிற படத்தின் மூலம் இயக்குனராக புகழ் பெற்றவர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி. தொடர்ந்து இ மா யு, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த படங்களின் வெற்றியால் அடுத்ததாக மம்முட்டி தனது சொந்த தயாரிப்பில் தானே ஹீரோவாக நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இன்னும் சில தினங்களில் மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மோகன்லால் நடிப்பில் மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார் லிஜோ ஜோஸ். இந்தநிலையில் நடிகர் சூர்யாவுக்காக ஒரு கதையை தான் உருவாக்கியுள்ளதாகவும் சூர்யாவிடம் அதை கூறியபோது அவருக்கும் ரொம்பவே பிடித்துப்போய் இந்த கதையை நாம் செய்வோம் என கூறியதாகவும் ஒரு தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் லிஜோ ஜோஸ். அதேசமயம் சூர்யாவின் கைவசம் ஏற்கனவே உள்ள படங்கள் மற்றும் சில காரணங்களால் இந்த படம் தள்ளிப்போய்க் கொண்டிருப்பதாகவும் நிச்சயமாக விரைவில் சூர்யாவிடமிருந்து அழைப்பு வரும் என நம்புவதாகவும் கூறியுள்ளார் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மோகன்லால் நடிப்பில் மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார் லிஜோ ஜோஸ். இந்தநிலையில் நடிகர் சூர்யாவுக்காக ஒரு கதையை தான் உருவாக்கியுள்ளதாகவும் சூர்யாவிடம் அதை கூறியபோது அவருக்கும் ரொம்பவே பிடித்துப்போய் இந்த கதையை நாம் செய்வோம் என கூறியதாகவும் ஒரு தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் லிஜோ ஜோஸ். அதேசமயம் சூர்யாவின் கைவசம் ஏற்கனவே உள்ள படங்கள் மற்றும் சில காரணங்களால் இந்த படம் தள்ளிப்போய்க் கொண்டிருப்பதாகவும் நிச்சயமாக விரைவில் சூர்யாவிடமிருந்து அழைப்பு வரும் என நம்புவதாகவும் கூறியுள்ளார் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!