
ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ‛கோல்டன் குளோப் விருது
ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இப்படம் நேரடியாகக் களமிறங்கியுள்ளது. இதனிடையே, ஆஸ்கர் விருதுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் வழங்கப்படும் பிரபலமான "கோல்டன் குளோப்" விருதுகளுக்காக "ஆர்ஆர்ஆர்" படம் இரண்டு பிரிவுகளில் "நாமினேட்" ஆகியது.
ஆங்கிலம் அல்லாத மொழிகளில் சிறந்த படத்திற்கான நாமினேஷன் மற்றும் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான (நாட்டு.. நாட்டு…) நாமினேஷனிலும் பங்கேற்றது. இந்நிலையில், இன்று கோல்டன் குளோப் விருது அறிவிக்கப்பட்டது. இதில், ‛நாட்டு.. நாட்டு…" பாடல், சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.
விருதை பெற்ற பின்னர் விழா மேடையில் பேசிய கீரவாணி, "இந்த விருதுக்கு நன்றி. எல்லோரும் சொல்வது போன்று இந்த விருது எனக்கானது அல்ல. எனது சகோதரரும், இந்த பட இயக்குநருமான ராஜமவுலிக்கு உரியது. என் உழைப்பின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கை, ஆதரவுக்கு நன்றி. மற்றும் பிரேம் ரஞ்சித், காலபைரவா, சந்திரபோஸ், ராம் சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி" என்றார்.
இதனையடுத்து, படக்குழுவினரும், தெலுங்குத் திரையுலகத்தினரும், மற்ற மொழி சினிமா பிரபலங்களும் மகிழ்ச்சியுடன், தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!