
‛நிறங்கள் மூன்று டப்பிங்கை முடித்த கார்த்திக் நரேன்
ஹைப்பர்லிங்க் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பாசிட்டிவ், நெகட்டிவ் மற்றும் கிரே என்கிற மூன்று நிறத்துக்கு சொந்தமான குணங்களை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் உருவாகி வருகிறது. குணச்சித்திர நடிகர் ஜெயப்பிரகாஷின் மகன் துஷ்யந்த் படத்தில் முக்கிய வேடத்தில் அறிமுகமாகிறார்.
கடந்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கிய படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடிவடைந்து விட்டதாக அறிவித்து உள்ளார் கார்த்திக் நரேன். விரைவில் டிரைலர் குறித்த தேதியும் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!