
ரேஷ்மாவுக்கு அதிர்ச்சி தந்த அந்த வீடியோ
அதில், நான் அமெரிக்காவில் இருந்தபோது எனது சகோதரி என்னுடைய அந்தரங்க வீடியோவை பார்த்ததாக ஒரு அதிர்ச்சி தகவல் கொடுத்தார். அந்த வீடியோவை எனக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அதில் இருப்பது நான் இல்லை. யாரோ மார்பிங் செய்து அதை வெளியிட்டுள்ளார்கள் என்பதை புரிந்து கொண்டேன். இதையடுத்து எனது குடும்பத்தாருக்கு அந்த உண்மையை புரிய வைத்தேன். என்னை போன்று திரை உலகை சாராத ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு கொடுமை நேர்ந்து இருந்தால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பார். சிலர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் இதன் உண்மைத்தன்மையை புரிந்து கொண்டு என்னை தேற்றியதால், நான் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வந்து விட்டேன் என்று தெறிவித்துள்ளார் நடிகை ரேஷ்மா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!