
நடிகர் சங்கத்திற்கு கடன் வாங்கி கட்டிடம்
நாசர் தலைவரான பிறகு வங்கி கடன் பெறாமலேயே நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என்று அறிவித்தார். அது சிறப்பான தொடக்கமாகவும் அமைந்தது. அதன்பிறகு நடந்த நிர்வாக மாற்றம், ஆட்சி மாற்றம், வழக்குகள், உள் குழப்பங்களால் 70 சதவிகித பணிகளோடு கட்டிடம் நின்று போனது.
தற்போது நாசர் மீண்டும் தலைவராகி இருக்கும் நிலையில் கட்டிட பணிகளை தொடங்க நிதி வசதி இல்லை. இதனால் சங்கத்தின் சார்பில் வங்கியில் கடன் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 30 கோடி கடன்பெற தலைவர் நாசரும், துணை தலைவர் பூச்சி முருகனும் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். கடன் கிடைத்ததும் 6 மாதத்தில் கட்டிடத்தை கட்டி முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!