
துணை என்பது கானல் நீர் - யூகங்களை ஏற்படுத்திய செல்வராகவன் டுவீட்
அந்த பதிவில், ‛‛தனியாகத்தான் வந்தோம், தனியாகத்தான் போவோம், நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது? துணை என்பது கானல் நீர், நெருங்க நெருங்க தூரம் ஓடும்"" என்று பதிவிட்டுள்ளார்.
செல்வராகவனின் இந்த பதிவு பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. குறிப்பாக, சமீபத்தில்தான் அவரது தம்பியான நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினியை விவாகரத்து செய்தார். இந்த நிலையில் செல்வராகவனும் இப்படி துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும் என்று பதிவிட்டிருப்பது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே செல்வராகவன் தனது முதல் மனைவியான நடிகை சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த பின் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்தார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!