
ஜெயம் ரவி பற்றிய ரகசியத்தை வெளியிட்ட சுரேஷ் கிருஷ்ணா
இதுபற்றி அவர் கூறும்போது, “எடிட்டர் மோகன் தனது மகன் ஜெயம் ரவியை உதவி இயக்குனராக சேர்த்துக் கொள்ளுமாறு என்னிடம் கூறினார். அந்த சமயத்தில் நான் ஆளவந்தான் படத்தை இயக்கி வந்தேன். அதில் அவரை உதவி இயக்குநராக சேர்த்துக் கொண்டேன்.. ஆனால் சில நாட்கள் சென்ற பிறகு தான், அவர் வெறும் உதவி இயக்குனராக மட்டும் என்னிடம் சேரவில்லை.. பின்னாளில் நடிகராக வேண்டும் என்பதற்காக நடிகர் கமலின் நடிப்பை அருகில் இருந்து பார்த்து அதன் மூலம் பல விஷயங்களை கற்றுக் கொள்வதற்காகவே என்னிடம் உதவி இயக்குனராக சேர்ந்துள்ளார் என தெரியவந்தது.. ஆளவந்தான் முடிந்த சில நாட்களிலேயே ஜெயம் படம் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமான நிகழ்வும் நடந்தது” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!