
போதை பொருள் வழக்கு: ரகுல் ப்ரீத் சிங்கிற்கு நோட்டீஸ்
டிச 17, 2022
Advertisement
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரில் இரண்டு போதை பொருள் கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக வாக்குமூலம் கொடுத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் அமலாக்கத்துறையினர் அப்போது பல சினிமா பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.
இந்த வழக்கு இப்போது இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் அமலாக்கத்துறை தெலுங்கானா சட்டசபை உறுப்பினர் பைலட் ரோகித் மற்றும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. போதை கடத்தல் தொடர்பாக கடந்த ஆண்டு ரகுல் ப்ரீத் சிங்கை இணைத்து செய்திகள் வந்தபோது கடுமையாக கோபம் அடைந்தார் என்பதும், என்னை பற்றி அவதூறு பரப்பும் மீடியாக்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று அப்போது அவர் கொந்தளித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கு இப்போது இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. இந்த நிலையில் அமலாக்கத்துறை தெலுங்கானா சட்டசபை உறுப்பினர் பைலட் ரோகித் மற்றும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. போதை கடத்தல் தொடர்பாக கடந்த ஆண்டு ரகுல் ப்ரீத் சிங்கை இணைத்து செய்திகள் வந்தபோது கடுமையாக கோபம் அடைந்தார் என்பதும், என்னை பற்றி அவதூறு பரப்பும் மீடியாக்களை சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்று அப்போது அவர் கொந்தளித்தது குறிப்பிடத்தக்கது.
Tags
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!