
விவாகரத்துகள் அதிகமாவது ஏன்? - வாணிபோஜன் கருத்து
இளம் கணவன், மனைவிக்கு இடையே நடக்கும் ஊடலும், காதலும்தான் படம். இதுகுறித்து வாணிபோஜன் கூறியதாவது: காதலித்து திருமணம் செய்தால் மட்டும் போதாது, திருமணத்திற்கு பிறகும் காதலிக்க வேண்டும், ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள வேண்டும், விட்டுக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிற படம்தான் லவ். என்றார்.
விவாகரத்துகள் அதிகம் நடப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த வாணி போஜன் “விவாகரத்துகள் அதிகரித்திருப்பது வருத்தம் தருகிறது. சரியான புரிதல் இல்லாமல் போனது, சுயசார்பும், சுதந்திரமும் தற்போது இருப்பதால் சுயநலமும் அதிகரித்து விட்டது. காதல் என்பது புரிதலிலும், விட்டுக் கொடுத்தலிலும்தான் இருக்கிறது. காதல் அவ்வளவு எளிதானதல்ல. முதலில் குடும்பத்தை காதலிக்க வேண்டும், உறவுகளை காதலிக்க வேண்டும். என்கிறார் வாணி போஜன்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!