
அந்தமான் பழங்குடி மக்களின் வாழ்வியலை பேசும் ‛புதர்
பழங்குடியினரைச் சேர்ந்த கோக்ரி (கோபாலகிருஷ்ணன்) என்பவர் கதாநாயகனாக நடித்துள்ளார். மற்ற நடிகர் நடிகைகள் தமிழ் மற்றும் மலையாள திரைத்துறையில் இருந்து நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் அகஸ்டின் கூறியதாவது: அந்தமானில் வசிக்கும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த "சென்டினல்" மக்கள் பற்றிய பல்வேறு தகவல்களை உருவகப்படுத்தி உருவாக்கப்பட்ட கதை. இப்படம் கேரளா மற்றும் கர்நாடக எல்லைக்கு அப்பால் உள்ள குருபா தீவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தில் பழங்குடியினர் பேசும் மொழி தனித்துவமானது மற்றும் வித்தியாசமானது. இந்த மொழிக்கான எழுத்துக்கள் அங்கு இல்லை.
கதைப்படி தர்மராஜனின் மகள் ருக்மணி பாலினவியல் குறித்த தனது பிஎச்டியை முடிக்க ஹிடிம்பா என்ற தீவுக்கு செல்கிறார். அங்கு அவள் பழங்குடியினரால் பிடிக்கப்பட்டு, அவர்களில் ஒருவராக ஆக்கப்படுகிறாள். அவள் தன்னை இயல்பு வாழ்க்கைக்கு மீட்டெடுக்க சித்த மருத்துவரின் உதவியை நாடுகிறாள். இப்படம் பழங்குடியினரின் இயல்பான மற்றும் பாலியல் வாழ்க்கையை வெளிப்படுத்துகிறது.
பெண் சார்ந்த இந்தப் படம் அந்தமானில் உள்ள சென்டினல் தீவில் வாழும் சென்டினல் மக்களின் ஒற்றுமையைக் கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்க பழங்குடியினர் 2500 ஆண்டுகளுக்கு முன்பு சென்டினல் தீவுக்கு குடிபெயர்ந்தனர். இந்தப் படத்தின் தனித்துவம் அதன் மொழியிலேயே உள்ளது. பழங்குடியினரின் மொழி அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் வாழ்க்கையின் அசல் தன்மை கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!