
ஹீரோவுடன் மோதல் : படத்திலிருந்து விலகினார் அனுபமா?
தற்போது அவர் ஏற்கெனவே வெளிவந்து வெற்றி பெற்ற தெலுங்கு படமான டிஜே தில்லு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்தார். இந்த படத்தில் சித்து ஜோன்னலசட்டா நாயகனாக நடித்து வந்தார். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வந்தது. படப்பிடிப்பு தளத்தில் சித்து - அனுபமா இடையே கருத்து மோதல் ஏற்பட்டதாகவும், இருவரையும் சமாதானப்படுத்த இயக்குனர் முயன்றும் முடியவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.. இருவரும் கோபமாக படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறி உள்ளனர். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
அதன்பிறகு படத்திலிருந்து விலகிய அனுபமாக தான் பெற்றிருந்த முன்பணத்தையும் தயாரிப்பாளருக்கு திருப்பி அனுப்பிவிட்டதாக தயாரிப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கிறது. தற்போது அனுபமா நடிக்க இருந்த கேரக்டரில் மடோனா செபஸ்டின் நடிக்க இருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!