
பாகுபலி இங்கு ஓடும்போது வாரிசு அங்க ஓடக்கூடாதா?: கஞ்சா கருப்பு கேள்வி
இதே நாளில் சிரஞ்சீவி நடித்துள்ள "வால்டர் வீரய்யா", பாலகிருஷ்ணா நடித்துள்ள "வீர சிம்ஹா ரெட்டி" உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளது. இதனால் சங்கராந்தி பண்டிகைக்கு நேரடி தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர் சங்க முடிவால் விஜய் நடித்த "வாரிசு" திரைப்படம் ஆந்திராவில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பெரிய ஹீரோக்கள் மவுனமாக இருக்கும் போது காமெடி நடிகர் கஞ்சா கருப்பு இது குறித்து பேசியிருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: நான் தெரியாம தான் கேக்குறேன். இங்க ஒரு படம் ஹிட்டானால் அந்த கதையைத் தெலுங்குக்கு வேண்டும் என்றால் கொடுக்கத்தான் போகிறோம். நீங்க ஏன் "வாரிசு" படத்திற்கு கொட்டகை (தியேட்டர்) இல்லை என சொல்கிறீர்கள்? உங்க படம் மட்டும் "பாகுபலி" தொடங்கி பரதேசி புலி வரை இங்க வந்திருக்கு. உங்க படம் மட்டும் தமிழ்நாட்டில் ஓடி பெரிய காசு பாக்கலாம். எங்க படம் அங்க ஓடக் கூடாதா? உங்க படம் வரும்போது ஸ்டே போட்டால் விடுவீங்களா? மரியாதையா "வாரிசு" படத்தை ஓட்டுங்க, அப்படி ஓட்டுனாதான் எங்களுக்கும் பெருமை, உங்களுக்கும் பெருமை.
இவ்வாறு அவர் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!