
நான் மிருகமாய் மாற படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம்: சசிகுமார் தகவல்
நவ 17, 2022
Advertisement
செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், உருவாகி உள்ள படம் நான் மிருகமாய் மாற. கழுகு படத்தை இயக்கிய சத்ய சிவா இயக்கி உள்ளார். சசிகுமார் கதையின் நாயகனாக நடித்துள்ளார். ஹரிபிரியா அவரது மனைவியாக நடித்திருக்கிறார். நாளை (18ம் தேதி) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விக்ராந்த், சரத் அம்பானி, சங்கரை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் குறித்து பேசிய சசிகுமார், “காமன் மேன் என்று தான் இந்த திரைப்படத்திற்கு முதலில் பெயர் வைக்கப்பட்டது. பின்னர் அந்த தலைப்பு மாற்றப்பட்டு "நான் மிருகமாய் மாறக் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தப் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கும். எனினும் குழந்தை, மனைவி என்று கதையில் ஒரு சராசரி மனிதனின் உணர்ச்சிகள் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.
பாடலே இல்லாத திரைப்படத்தில் முதன்முறையாக நடித்துள்ளேன். படத்தில் நடனம் இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்பொழுதும் ஒரு கிராமத்து கதாநாயகனாக வயலில் வேட்டியுடன் சுற்றித்திரிந்த எனக்கு ஒலிப் பொறியாளர் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருந்தது.
படத்தில் அனைத்துமே புதிதாக இருக்கும். இதற்காக அனைவரும் கடினமாக உழைத்து உள்ளோம். படக்குழுவினர் அனைவரும் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக பங்களித்து பணியாற்றியுள்ளனர்” என்றார்.
இந்த படம் குறித்து பேசிய சசிகுமார், “காமன் மேன் என்று தான் இந்த திரைப்படத்திற்கு முதலில் பெயர் வைக்கப்பட்டது. பின்னர் அந்த தலைப்பு மாற்றப்பட்டு "நான் மிருகமாய் மாறக் என்று பெயர் சூட்டப்பட்டது. இந்தப் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கும். எனினும் குழந்தை, மனைவி என்று கதையில் ஒரு சராசரி மனிதனின் உணர்ச்சிகள் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.
பாடலே இல்லாத திரைப்படத்தில் முதன்முறையாக நடித்துள்ளேன். படத்தில் நடனம் இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்பொழுதும் ஒரு கிராமத்து கதாநாயகனாக வயலில் வேட்டியுடன் சுற்றித்திரிந்த எனக்கு ஒலிப் பொறியாளர் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருந்தது.
படத்தில் அனைத்துமே புதிதாக இருக்கும். இதற்காக அனைவரும் கடினமாக உழைத்து உள்ளோம். படக்குழுவினர் அனைவரும் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக பங்களித்து பணியாற்றியுள்ளனர்” என்றார்.
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!