
விஜய்யை தொடர்ந்து சுந்தர்.சி இயக்க ஆசைப்பட்ட இன்னொரு ஹீரோ
இந்த நிலையில் விஜய்யைப் போலவே உதயநிதியை வைத்தும் தான் ஒரு படம் பண்ண ஆசைப்பட்டதாகவும், அந்த வாய்ப்பு நழுவி விட்டதாகவும் சென்னையில் நடந்த கலகத் தலைவன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார் சுந்தர் சி. அது குறித்த அவர் கூறுகையில், இந்த கலகத் தலைவன் படத்தில் நாயகனாக நடித்துள்ள உதயநிதியை வைத்து தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தை இயக்குவதற்கு முயற்சி எடுத்தேன். ஆனால் சில காரணங்களால் அந்த படத்தில் உதயநிதி நடிக்கவில்லை. அதன் காரணமாகவே சித்தார்த் நடித்தார். அந்த படம் அப்போது சூப்பர் ஹிட் ஆனது என்றார் சுந்தர். சி. இன்றைக்கு பல இயக்குனர்களின் படத்தை வாங்கி, அதை நம்பிக்கையோடு வெளியிட்டு வருகிறது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த மேடையில் பேசினார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!