
சமந்தா எதையும் வெளிக்காட்டியது இல்லை : உன்னி முகுந்தன்
இந்த நிலையில் சமந்தா கதாநாயகியாக நடித்துள்ள யசோதா திரைப்படம் வரும் நவம்பர் 11ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகர் உன்னி முகுந்தன். தமிழில் சீடன், பாகமதி ஆகிய படங்களில் நடித்தவர்.
யசோதா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பேட்டி ஒன்றில் உன்னிமுகுந்தன் கூறும்போது, “இந்த படத்தில் நான் ஏன் நடித்தேன் என்பது படம் பார்க்கும்போது உங்களுக்கு புரியும். அதனால் அதுபற்றி இப்போது அதிகம் பேச விரும்பவில்லை. சமந்தா இந்த படத்தில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் நடித்துள்ளார். படப்பிடிப்பில் என்னுடனும், படக்குழுவினருடனும் கலகலப்பாக சிரித்து பேசியபடி தான் இருப்பார். ஆனால் ஒருநாள் கூட நான் இப்படி ஒரு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக எந்த ஒரு கஷ்டத்தையும் அவர் வெளிக்காட்டியதே இல்லை. அதுபற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டதும் இல்லை. அந்த அளவிற்கு அவர் தொழிலையும் பர்சனல் விஷயங்களையும் தனித்தனியாக பிரித்து வைத்து இருந்தார்” என்று கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!