
வலிமையான, அற்புதமான பெண்மணி சமந்தா: சிரஞ்சீவி புகழாரம்
இது திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் சமந்தாவுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் அளித்து வருகிறார்கள். சமந்தாவின் முன்னாள் கணவரான நாகசைதன்யாவின் தம்பியும், நடிகருமான அகில், விரைவில் சமந்தா குணமாகி வர வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி வெளியிட்ட பதிவில், “சமந்தா, நம் வாழ்க்கையில் அவ்வப்போது சவால்கள் வந்து கொண்டேயிருக்கும். அவை நம் மனவலிமையை கண்டறிவதற்காகக் கூட இருக்கலாம். மிகப்பெரிய மனவலிமை கொண்ட அற்புதமான பெண் நீங்கள். விரைவில் உங்களுக்கான இந்த சவாலையும் நீங்கள் முறியடிப்பீர்கள். தைரியமும், நம்பிக்கையும் கிடைக்க வாழ்த்துகள்"" என பதிவிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!