
சமந்தா நடிக்கும் யசோதாவில் வாடகை தாய் மோசடி கதை
இதன் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, தமிழில் சூர்யா, கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி, மலையாளத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஹிந்தியில் வருண் தவான் வெளியிட்டனர்.
இந்த டீசரில் யசோதா வாடகை தாய் மோசடி தொடர்பான கதை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏழை வீட்டு பெண்ணான சமந்தா ஒரு கோடீஸ்வர பெண்ணுக்கு வாடகை தாயாக இருந்து குழந்தை பெற்று கொடுக்கிறார். இது தொடர்பாக வாடகை தாய் குழந்தை பெற ஏற்பாடு செய்த ஆஸ்பத்திரி நிர்வாகம் மோசடி செய்து விட அதை எதிர்த்து இன்னொரு சமந்தா போராடுகிற மாதிரியான கதை என்று தெரிகிறது. வாடகை தாயாகவும், அந்த தாய்க்கு பிறந்த குழந்தையாகவும் சமந்தா நடித்திருப்பதை யூகிக்க முடிகிறது. மருத்துவமனையின் உரிமையாளராக வரலட்சுமி சரத்குமார் நெட்டிவ் கேரக்டரில் நடித்திருப்பதம் தெரிகிறது.
நயன்தாரா வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்று பரபரப்பு ஓய்ந்திருக்கும் இந்த நேரத்தில் இந்த டீசர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!