
தயாரிப்பாளர் ஈ.வி.ராஜன் காலமானார்: முதல்வர் இரங்கல்
மறைந்த ராஜனுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தமிழக முதல்வர் ஸ்டாலின் ராஜன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் “தயாரிப்பாளர் ஈ.வி.ராஜன் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. திறமையான பல கலைஞர்களை கண்டறிந்து அவர்கள் மீது புகழ் வெளிச்சம் பாய்ச்சியவர். அவரது மறைவு கலைத்துறைக்கு பேரிழப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!