
இயக்குனரின் செயலால் மகிமா அதிர்ச்சி
அக் 11, 2022
Advertisement
தமிழில் சாட்டை படத்தில் அறிமுகமானவர் மகிமா நம்பியார். பின்னர் அசுரகுரு, மகாமுனி, ஓ மை டாக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ரத்தம் என்ற படத்தில் விஜய் ஆண்டனியுடன் நடித்து வருகிறார். இதனை சி.எஸ்.அமுதன் இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு முடிந்து வாகனத்தின் திரும்பும்போது களைப்பால் மகிமா நம்பியார் அசந்து தூங்கியுள்ளார். வாயை திறந்தபடி அவர் தூங்கும் காட்சியை படம் எடுத்து தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் சி.எஸ்.அமுதன். “ரத்தம் டீமின் கடும் உழைப்பு” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவை மகிமா நம்பியாருக்கு டேக் செய்துள்ளார்.
மகிமா நம்பியார் இந்தப் பதிவை பார்த்து "அய்யோ அசிங்கம், அவமானமாக போச்சு இனி நான் இந்தியா பக்கமே திரும்ப மாட்டேன்” என பதிவிட்டுள்ளார். மகிமா சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் “அவருடைய போட்டோவை பார்க்கும்போது என் போட்டோவை பார்ப்பது போல் உள்ளது” என விஜய் ஆண்டனி கூறி உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு முடிந்து வாகனத்தின் திரும்பும்போது களைப்பால் மகிமா நம்பியார் அசந்து தூங்கியுள்ளார். வாயை திறந்தபடி அவர் தூங்கும் காட்சியை படம் எடுத்து தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் சி.எஸ்.அமுதன். “ரத்தம் டீமின் கடும் உழைப்பு” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவை மகிமா நம்பியாருக்கு டேக் செய்துள்ளார்.
மகிமா நம்பியார் இந்தப் பதிவை பார்த்து "அய்யோ அசிங்கம், அவமானமாக போச்சு இனி நான் இந்தியா பக்கமே திரும்ப மாட்டேன்” என பதிவிட்டுள்ளார். மகிமா சமாதானப்படுத்தும் நோக்கத்துடன் “அவருடைய போட்டோவை பார்க்கும்போது என் போட்டோவை பார்ப்பது போல் உள்ளது” என விஜய் ஆண்டனி கூறி உள்ளார்.
Tags
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!